தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை  ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

ஆய்வு 

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்பாலானந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்பாலானந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆய்வு செய்து பேசியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் 100 நாள் வேலைகள் நீங்கள் சரியான முறையில் செய்து பணிகளை விரைந்து முடியுங்கள் அதே போல் யாரும் 100 நாள் வேலையில் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டாம் ,அரசால் உங்களுக்காக வழங்கப்படும் திட்டம் இது, இந்த திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதாலும், ஏழை எளிய மக்களுக்கு இதன் மூலம் வழங்கப்படும் மான்யங்கள் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. அதனால் நீங்கள் 100 நாள் வேலையை சரியான முறையில் செய்யுங்கள் .உங்களுக்கு உடனுக்குடன் 100 நாள் வேலை கிடைக்கும் என்று ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை கூறினார்.

Tags

Next Story