மேலேரிபாக்கத்தில் பள்ளி மாணவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய துணைதலைவர்

மேலேரிபாக்கத்தில் பள்ளி மாணவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய துணைதலைவர்

மாணவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துணைத் தலைவர் 

பள்ளி மாணவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துணைத் தலைவர்

செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் ஒன்றிய மேலரிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் துணை தலைவருமான எம் பூபதி தனது 51 -வது பிறந்த நாளை மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு,

இனிப்புகள் வழங்கியதுடன் அறுசுவை உணவினை பரிமாறினார்.. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தாழம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தாழை ரவி, சோகண்டி ஊராட்சி மன்ற தலைவர் சார்பில், சரவணன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சால்வை அணிவித்ததுடன் மலர் மாலை அணிவித்து பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் எஸ்.எம்.சி குழுவினர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story