பரமத்தி வேலூர் அருகே குளியல் அரையில் மயங்கி விழுந்தவர் பலி !!

பரமத்தி வேலூர் அருகே குளியல் அரையில் மயங்கி விழுந்தவர் பலி !!

பலி

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே குளியல் அரையில் மயங்கி விழுந்து பலியானவர் குறித்து போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி, வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(30) கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் முத்துக்குமாரை‌ குரும்பல மகாதேவி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்காக அழைத்துச் சென்றதாக‌ கூறப்படுகிறது. வேலையை‌ முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமார் குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கிருபா குளியலறைக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது அவரது கணவர் சுவர் ஒரத்தில் குப்புறமாக விழுந்து கிடந்ததை‌ பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த முத்துக்குமாரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story