விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மயங்கி விழுந்தவர் பலி

விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மயங்கி விழுந்தவர் பலி
காவல் நிலையம் 
விருதுநகர் மாவட்டம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மயங்கி விழுந்த நபர் பலியானர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் ஜான் ஜெயராஜ் இவருடைய மனைவி அம்மாள். இவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜான் ஜெயராஜ் தனது நண்பர்களுடன் விருதுநகர் சிவகாசி சாலையில் சிட்கோவில் உள்ள கம்பெனியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அவருடன் அவருடைய நண்பர்கள் சத்யராஜ் சக்திவேல் ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது சிட்கோ கம்பெனியை திறந்து உள்ளே சென்ற போது திடீரென ஜான் ஜெயராஜிற்கு இருமல் வந்ததாகவும் இதை அடுத்து அவர் வெளியே வந்து விட்டதாகவும் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஜான் ஜெயராஜை பார்த்துவிட்டு அவருக்கு துடிப்பு இல்லை என கூறிவிட்டு சென்றதாகவும் இதை அடுத்து அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு இருந்த திருத்தங்கள் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story