போடிநாயக்கனூரின்சிகிச்சையில் இருந்தவர் பலி

போடிநாயக்கனூரின்சிகிச்சையில் இருந்தவர் பலி

காவல் நிலையம் 

போடிநாயக்கனூர் கருப்பசாமி கோவில் அருகே பாலத்திலிருந்து விழுந்து சிகிச்சையில் இருந்தவர் பலியானர்.

போடிநாயக்கனூர் மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி வயது 65. இவர் கடந்த 29ம் தேதி கருப்பசாமி கோவில் அருகே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கிருந்து அவர் க. விலக்கு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்

Tags

Next Story