திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொண்ட வீடியோ வைரல்!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்: வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொண்ட வீடியோ வைரல். திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சரக்கு ஏற்றும் மையம் அருகே வடமாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ரத்தம் வரும் அளவிற்கு இளைஞர்கள் தாக்கிக் கொண்டதை கண்ட‌ பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் போலீசார் வருவதை அறிந்த வடமாநில இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விசாரணையில் ரயில் ஏற இறங்க வரும் வடமாநில இளைஞர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாக்கிக் கொண்டது தெரியவந்தது. வடமாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story