தர்மபுரி : கிராம நிர்வாக அலுவர்கள் கண்டன ஆர்பாட்டம்

தர்மபுரி : கிராம நிர்வாக அலுவர்கள் கண்டன ஆர்பாட்டம்

கிராம நிர்வாக அலுவர்கள் போராட்டம்


டிஜிட்டல் கிராப் சர்வே தூங்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை கண்டித்து தர்மபுரி வட்டாசியர் அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே என்ற பெயரில் அரசு முறையற்ற அழுத்தத்தை கொடுப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் என். ஏழுமலை. தலைமை வகித்தார், வட்ட செயலாளர் தீ.ஆறுமுகம். முன்னிலை வகித்தார், வட்ட பொருளாளர் பி.கார்த்திக், வரவேற்று பேசினார், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் அகிலன் அமிர்தராஜ், மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி, ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து பேசினர், கிராம நிர்வாக அலுவலர்கள் 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags

Next Story