குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
தென்காசி அருகே குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
தென்காசி அருகே குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான குற்றால அருவிகள் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வறண்ட காணப்பட்டது. இந்நிலையில் இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து துவங்கியது, இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வந்தனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் மழை நின்றதால் இன்று 15-ம் தேதி குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story