வெள்ளப்பெருக்காள் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர்

வெள்ளப்பெருக்காள் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர்

 கரை உடைந்து வெளியேறிய தண்ணீர்

திண்டுக்கல் அருகே வெள்ளப்பெருக்காள் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர்.
திண்டுக்கல் அருகே குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாமரைக் குளம் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. கனமழையின் காரணமாக திண்டுக்கல் குடகனாற்றில் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனுமந்தராயன் கோட்டையில் உள்ள வண்டிப்பாலத்தின் மதகை திறக்காத காரணத்தால் தாமரை குளத்தின் கரையிலிருந்து நீர் கசிந்து பட்டா நிலங்களுக்குள் செல்கிறது. அதிகமான நீர் வருவதால் பாலோடை மற்றும் மறுகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு முறையான பதிலும் இல்லாத காரணத்தால் அனுமந்தராயன் கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி பகுதி விவசாய பெருமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags

Next Story