மீன் பிடிக்க சென்ற போது வெல்டிங் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

மீன் பிடிக்க சென்ற போது வெல்டிங் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

மீன் பிடிக்க சென்றவர் பலி

கள்ளகுறிச்சி மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சேற்றில் சிக்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே கருமலைக்கூடல் சின்னைய செட்டி தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 31), ‘வெல்டிங்’ தொழிலாளி. சம்பவத்தன்று இவர் நங்கவள்ளி அருகே சாணாரப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சாணாரப்பட்டி கணக்கன் ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.

அங்கு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக சேற்றில் கால் சிக்கிக்கொண்டதில் அவர் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே சிவராஜ் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story