பைப்புகளை உடைத்து எறிந்த காட்டு யானை - வைரலாகும் சிசிடிவி காட்சி!

தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து தண்ணீர் பைப்புகளை சேதம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார்.கடந்த 30 ஆம் தேதி விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று தொண்ணூற்று ஆறு தென்னை கன்றுகளை சேதப்படுத்தியதுடன் சொட்டு நீர் செல்லக்கூடிய தண்ணீர் பைப்புகளை உடைத்து உள்ளது.இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story