அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மண்டியிட்ட பெண்ணால் பரபரப்பு

அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மண்டியிட்ட பெண்ணால் பரபரப்பு
சமாதானம் செய்யும் போலீசார் 
குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்க கோரி சேலம் அரசு மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் சாலையில்  மண்டியிட்டு கோரிக்கை விடுத்ததால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனை முன்பு நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார். அவர் திடீரென சாலையில் மண்டியிட்டு, உருளுதண்டம் போட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர், சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மைதிலி என்பதும், இவருக்கு 2 மகன்கள் உள்ளதும், குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க கோரி இவ்வாறு நடந்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story