கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பெண் கணவர் வீட்டின் முன் தர்ணா

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பெண் கணவர் வீட்டின் முன் தர்ணா

தர்ணாவில் ஈடுபட்ட பெண் 

திருவாடானை அருகே பிரிந்து சென்ற கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி சரண்யா என்ற பெண் கணவர் வீட்டின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகள் சரண்யா என்பவருக்கும் ஆதியாகுடி கிராமத்தை சேர்ந்த பால்சாமி என்பவர் மகன் மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 2017 ம் ஆண்டு சென்னை வடபழனி அழகிரி நகர் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் ஏழு வருடமாக வாழ்ந்து வந்தபோது சரண்யா பலமுறை கர்ப்பமான நிலையில் மகேந்திரன் பாலில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து ஏழு முறை கர்பத்தை கலைத்து விட்டதாக சரண்யா கூறுகிறார்.

இந்நிலையில் தற்போது ஊருக்கு வந்த மகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனை அறிந்த சரண்யா திருமணத்தை தடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மகேந்திரன் சரண்யாவுடன் தொடர்ந்து சேர்ந்து வாழாமல் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. போன் செய்தாலும் அதை தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சரண்யாவிற்கு கரு கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தனது கனவர் மகேந்திரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகேந்திரனும் அவரது தாயார் மாரிமுத்துவும் தகாத வார்த்தைகளால் திட்டி சரண்யாவை கம்பு மற்றும் கட்டையால் சராமரியாக தாக்கி தரதரவென இழுத்து வெளியில் தள்ளியுள்ளனர். மேலும் மாமியார் மாரிமுத்து தன்னை கையில் கடித்து கழுத்தில் கீரியதாகவும் தாக்கியதில் கை, தலையில் காயம் ஏற்பட்டது. தனக்கு மகளிர் காவல் நிலையத்திலும் எந்த நடவடிக்கையும் நியாயமும் கிடைக்கவில்லை எனக் கூறி இரத்த காயங்களுடன் கனவர் வீட்டின் வாசலிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார் நேரில் சரண்யாவிடம் விசாரனை நடத்தி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனால் தனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என கூறி சரண்யா தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

மகேந்திரன் பாதிக்கப்பட்ட சரண்யாவை போல பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு பின்னர் அந்த பெண்னை கழட்டி விடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2013ல் பிரபு என்பவருடன் சரண்யாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கு முன்பே சரண்யாவும், மகேந்திரனும் காதலித்து வந்தாகவும் இந்த விவரம் பிரபுக்கு தெரியவர அவர் சரண்யாவை விட்டு பிரிந்துள்ளார். பிரபுக்கும் சரண்யாவிற்கும் பிறந்த ஆண் குழந்தையுடன் இருந்தவரை முன்னாள் காதலன் மகேந்திரன் 2017ல் வாழ வைப்பதாக கூறி நம்பவைத்து திருமணம் செய்து 7 வருடம் வாழ்ந்து வந்த நிலையில் சரண்யாவிடம் ஊருக்கு சென்று வருவதாக கூறி சென்னையில் இருந்து வந்தவர் வேறு ஒரு பெண்னை திருமணம் செய்ய நிச்சயம் செய்து பத்திரிக்கை அடித்து திருமணம் நடத்த இருந்த தகவல் தெரிந்த சரண்யா தன்னுடன் நெருக்கமாக இருந்த படத்தை பெண் வீட்டாருக்கு அனுப்பியதில் திருமணம் நின்றது. இதனால் ஆத்திரமுற்ற மகேந்திரன் ஆதியாகுடியில் பெற்றோருடன் இருந்து விட்டார்.

Tags

Next Story