மண்ணெண்ணெய் குடித்து மனு அளித்த பெண்ணால் பரபரப்பு

மண்ணெண்ணெய் குடித்து மனு அளித்த பெண்ணால் பரபரப்பு

சாந்தி

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் குடித்துவிட்டு மனு கொடுத்த போது மயங்கி விழுந்த பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த சாந்தி மனு கொடுக்க வந்த போது மண்ணெண்ணையை குடித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டதில் சாந்தி அதே பகுதியில் 52 செண்டில் பயிறு வைத்துக்கொண்டு கடந்த 40 ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலையில் நிலத்தின் பக்கத்தில் ரியல் எஸ்டேட் செய்யும் தாஜ்மரா பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் தனக்குத்தான் சொந்தம் என தொடர்ந்து சண்டை போட்டு வருவதால் மண்ணெண்ணெய் குடித்து மனு கொடுத்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story