வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய பெண்... சுயரூபத்தைக் காட்டிய காதலன் கைது!

வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய பெண்... சுயரூபத்தைக் காட்டிய காதலன் கைது!

அருண்குமார் 

இளம் பெண்ணிடம் பழகி ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலமாக இளம் பெண்ணிடம் பழகி ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை எடுத்து வைத்துக்கொண்டு இளம் பெண்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் அவர்கள் கற்பை சூறையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொடுமைகள் தொடர்பாக மிகச் சில பெண்கள் மட்டுமே தைரியமாக வெளியே வந்து போலீஸில் புகார் அளிக்கின்றனர். அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் அவரை காதலிப்பதாக அருண்குமார் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் அருண்குமார் தன்னை காதலிப்பதாக நம்பியுள்ளார். இருவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் நெருக்கம் அதிகரித்த நிலையில், வீடியோ கால் மூலமாக அடிக்கடி பேசி வந்துள்ளனர். அவ்வாறான சமயங்களில் நிர்வாணமாக அந்த பெண்ணை பேச அருண்குமார் கட்டாயப்படுத்தி உள்ளார். காதலர்தானே என்ற எண்ணத்தில் அந்த பெண்ணும் அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் அருண்குமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது அருண்குமார் தனது சுய ரூபத்தை அந்த பெண்ணிடம் காட்டியுள்ளார். ஏற்கெனவே அவருடன் பேசிய நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதைக் காட்டி அந்த பெண்ணை அருண்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அருண்குமாரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story