பெண்ணை காதலித்தவருக்கு கொலை மிரட்டல்- ஒருவர் கைது

பெண்ணை காதலித்தவருக்கு  கொலை மிரட்டல்- ஒருவர் கைது
ஆலங்குளம் அருகே பெண்ணை காதலித்தவருக்கு கொலை மிரட்டல்- ஒருவர் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பெண்ணை காதலித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த சிவா என்பவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் என்பவர் நேற்று மாலையில் சிவாவை அசிங்கமாக பேசி அவரது போனை பிடுங்கி உடைத்து, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவா கொடுத்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் எஸ்.ஐ கோவிந்தராஜ் விசாரணை மேற்கொண்டு ராஜேஷை கைது செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story