மானாமதுரையில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்

மானாமதுரையில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்

குடிநீர் இணைப்பு 

மானாமதுரையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் அதனை ஒட்டி உள்ள விரிவாக்க பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு 38.86 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது மானாமதுரை நகராட்சியில் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிதாக குழாய்கள் பதிக்கும் பணியும், நகராட்சியை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா பார்வையிட்டனர்.

Tags

Next Story