தர்மபுரியில் சாலை தடுப்பு சுவர் இடைவெளியை சரி செய்யும் பணி திவிரம்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிக்னலில் இருந்து நான்கு ரோடு வரை தடுப்பு சுவர் இடைவெளியை சரி செய்யும் பணி திவிரமாக நடக்கிறது.
தர்மபுரி நகர பகுதியில் உள்ள சாலையில் குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிக்னலில் இருந்து நான்கு ரோடு வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் பல்வேறு பகுதிகளில் சிறிய இடைவெளிகள் உள்ளது. இதில் பொதுமக்கள் சாலையை கடக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நிர்வாகம் தடுப்பு சுவரில் உள்ள சிறிய பாதையை அடைத்து வரும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் சாலையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story