கடலில் தவறி விழுந்த தொழிலாளி மாயம்

கடலில் தவறி விழுந்த தொழிலாளி மாயம்

 கடலில் தவறி விழுந்த தொழிலாளி மாயம் 

கன்னியாகுமரி கடலில் தவறி விழுந்த தொழிலாளி மாயம் இதை அடுத்து படகின் உரிமையாளர்  மீன்வளத் துறையில் புகார்.
குமரி மாவட்டம் தேங்காபட்டணம் அருகே நித்திரவிளை சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் யூஜின். இவருக்கு சொந்தமான பினோல்சியா என்ற விசைப்படகில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மீன் பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு படகு கரைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 35 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் வைத்து தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஜலால் (40) என்பவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவரை மீட்க முடியவில்லை. அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களும் அவர்களுடைய விசைப்படகு மூலம் தேடி வருகின்றனர். ஜலாலுக்கு பானு என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இதனிடையே ஜலால் மாயமானது குறித்து தமிழக மீன்வளத் துறைக்கு படகின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story