பாலிஷ் போடுவதாக இளம்பெண்ணை ஏமாற்றி செயின் பறிப்பு

பாலிஷ் போடுவதாக இளம்பெண்ணை ஏமாற்றி செயின் பறிப்பு

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சொக்கநாதபுரத்தில் நகைக்கு பாலிஷ் போடுவதாக இளம் பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சொக்கநாதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் .இவரது மனைவி ** 36 வயதான செல்வி.இவர் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் செய்வதாக செல்வி அணுகினர் .

பாத்திரங்களுக்கு பாலிஷ் செய்த பின் தங்க நகைகளை பாலிஷ் செய்வதாக செல்வியிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய இளம் பெண் செல்வி கழுத்தில் கிடந்த 4 1/2 பவுன் செயினைக் கழற்றி கொடுத்துள்ளார். செயினை எடுத்துக்கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை வாங்கி தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story