இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

திருக்கண்ணபுரம் அருகே குற்ற வழக்கில் சிறை சென்று தற்சமயம் ஜாமினில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை.
திருக்கண்ணபுரம் அருகே குற்ற வழக்கில் சிறை சென்று தற்சமயம் ஜாமினில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலகம் சாமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சரவணன் வயது 31 இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரடாச்சேரி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். கடந்த இரண்டாம் தேதி ஜாமினில் வெளியே வந்த சரவணன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் தினந்தோறும் சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். சிறைக்கு சென்ற சரவணன் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி ஏழு புதன்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் சரவணன் தனது வீட்டில் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக சரவணன் அண்ணன் சதீஷ்குமார் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story