எதிர் வீட்டில் கைவைத்த இளைஞர், திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை

எதிர் வீட்டில் கைவைத்த இளைஞர், திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை

மதுராந்தகத்தில் எதிர் வீட்டில் திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்.


மதுராந்தகத்தில் எதிர் வீட்டில் திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த செந்னேரி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் .‌ இவர் அப்பகுதியில் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கோபிநாத் தன் எதிர் வீட்டில் திருட்டு சம்பவத்தை மேற்கொள்ள பல நாட்களாக திட்டம் திட்டி வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபிநாத் தனது எதிர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு சென்ற பிறகு, நைசாக அங்கே சென்ற கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்தார்..தொடர்ந்து வீட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மட்டும் இரண்டரை சவரன் நகை திருடி சென்றார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாக ஒரத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.காவல்துறை நடத்திய விசாரணையில் கோபிநாத் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை வைத்து நண்பர்களுடன் ஜாலியாக மது அருந்தி வந்ததும் தெரியவந்தது ‌. உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story