சேலம்: நண்பன் மீது திராவகம் வீசிய இளைஞர்

சேலம்: நண்பன் மீது திராவகம் வீசிய இளைஞர்

கோப்பு படம்

சேலம் அருகே ஏற்பட்ட மோதலில் நண்பர் மீது திராவகம் வீசியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை மூலபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் ( 30). இவரும், சித்தா கவுண்டர் காடு பகுதியை சேர்ந்த தங்கராஜியும் (27) நண்பர்கள் ஆவர். மேலும் அவர்கள் ஒரே வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த 1ம் தேதி இரவு ராவணேஸ்வரா நகரில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ரமேஷ் மீது தங்கராஜ் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை வீசினார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கராஜை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story