விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

காங்கயத்தில் மொப்பட் மீது கார் மோதியதில் இளைஞர் பலியானது காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கயத்தில் மொப்பட் மீது கார் மோதியதில் இளைஞர் பலியானது காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்‌ அடுத்த நிழலி கிராமம் புள்ளகாளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சேர்ந்தவர் தர்மதுரை.

இவரது மகன் பேறரிவேந்தன் வயது 25. இவர் சில வருடங்களுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் சொந்த வேலையாக காங்கேயம் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்ப காங்கேயம் தாராபுரம் சாலையில் அவருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பேறரிவேந்தன் பின்னால் தாராபுரம், பொன்னாபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் வயது 38 என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேறரிவேந்தன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கை கால்களில் இரத்த காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் பேறரிவேந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story