வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!

பைல் படம் 

செய்யாறு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58), விவசாயி. இவர் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது,திடீரென மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி தடுத்து நிறுத்தியுள்ளார். சேகரை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மொய்தீனை கைது செய்தனர்.

Tags

Next Story