திருமண விழாவுக்கு வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

கன்னியாகுமரி அருகே திருமணவிழாவிற்கு வந்த இளைஞர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை ம்ற்கொண்டு வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அருகே நடந்த திருமண விழாவிற்கு கலந்து கொள்ள தூத்துக்குடியை சேர்ந்த கன்னி ராஜன் மகன் சதீஷ்குமார் (18) என்பவர் தனது நண்பருடன் வந்திருந்தார். அப்போது நண்பர்களுடன் ஈத்தங்காடு அருகே குலசேகரன் புதூர் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது சதீஷ்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பழியானார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மூழ்கி பலியான சதீஷ்குமார் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story