மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்ற இளைஞர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்ற இளைஞர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கழுத்தை நெரிக்க முயன்ற இளைஞர்

கோவை,திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களின் மையப்பகுதியாகவும் தமிழக-கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது.இதனால் அன்னூர் பேருந்து நிலையத்தை நாள்தோறும் பணி நிமித்தமாகவும், பள்ளி,கல்லூரி செல்வதற்காகவும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மாலை மாணவிகள் இருவர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென மாணவிகளில் ஒருவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார்.இதனைக் கண்ட பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.பேருந்துக்காக காத்திருந்த மாணவியின் கழுத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நெரிக்க முயன்ற சம்பவத்தால் பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story