ஆலங்குடி அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞர் மாயம்!

ஆலங்குடி அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞர் மாயம்!

காவல்துறை விசாரணை


ஆலங்குடி அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞர் மாயம்.
ஆலங்குடி அருகே புதன்கிழமை இரவு கோயில் திருவிழாவுக்குச் சென்று காணாமல் போன இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் பிரசாந்த் (29). ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டுமானத் தொழில் செய்து வந்த இவர், புதன்கிழமை இரவு கொத்தமங்கலம் கோயில் திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பிறகு பிரசாந்த் வீடு திரும்பவில்லை யாம். கோயில் அருகே மோட்டார் சைக்கிள் மட்டும் இருந்துள்ளது.இதுகுறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story