தீரன் சின்னமலை பிறந்த நாள் - மாவட்ட ஆட்சியர் மரியாதை

தீரன் சின்னமலை  பிறந்த நாள் - மாவட்ட ஆட்சியர் மரியாதை

 மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை 

சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப்போராட்ட வீரர் மாவீரன் திரன் சின்னமலை பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Tags

Read MoreRead Less
Next Story