ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி!

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி!

ஆதிகேசவ பெருமாள் 

ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சி சின்னக்கடை வீதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமஞ்சனம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு முத்துப்பல்லக்கில் உற்சவர் சாமிகளை வைத்து நல்ல தண்ணீர்குளம் சென்றடைந்தது. அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story