காட்பாடி அருகே ஐந்து இடங்களில் திருட்டு: 3 பேர் கைது

காட்பாடி அருகே ஐந்து இடங்களில் திருட்டு: 3 பேர் கைது

நகை திருட்டில் ஈடுபட்டவர்கள்

தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சேனூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (66). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 8-ந் தேதி இரவு சவுந்தரராஜன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேனூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

வீட்டின் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். சவுந்தரராஜன் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்தி ருந்த 20 பவுன் நகைகள் திருட்டுபோனது தெரிய வந்தது.

இது குறித்து அவர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேனூர் பகுதி கோடாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் (19), திருமணி மெயின் ரோட்டை சேர்ந்த அவினேஷ் (19) மற்றும் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசார ணையில், 3 பேரும் சேர்ந்து முன்னாள் ராணுவ வீரர் சவுந்தரராஜன் வீட்டில் 20 பவுன் நகை திரு டியதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் காட்பாடி பகுதியில் உள்ள 4 வீடுகளில் 17 பவுன் நகை திருடியதையும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Tags

Next Story