வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துதூர்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சி திருவெண்ணைநல்லுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அம்பிகா,70; இவர் வீட்டுக்கு முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 1ம் தேதி குறிஞ்சிப்பாடியில் உள்ள மூத்த மகள் சுகுணாராணி வீட்டு விசேஷத்திற்காக சென்றனர். நேற்று காலை வீட்டின் முன் பக்க கதவுவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்பிகாவிற்கு தகவல் தெரிவித்தனர். அம்பிகா, வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகைகள், ரூ. 2 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story