தக்கலை அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு 

தக்கலை அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு 
திருட்டு நடந்த கடை
தக்கலை அருகே கடையின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் தக்கலை அருகே காட்டாத் துறை பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (33) சிவில் இன்ஜினியர். இவர் புலிப்பனம் பகுதியில் கட்டிட வேலைக்கான ஆபீஸ் மற்றும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாளைக்கு முன் இரவு கடையை பூட்டி விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த இரண்டு லேப்டாப் மற்றும் 47 ஆயிரத்து 500 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தக்கலை போலீசின் நிலையத்தில் ஆல்பின் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story