வீட்டின் பூட்டு உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டு உடைத்து திருட்டு

 திருட்டு

வீட்டின் பூட்டு உடைத்து திருட்டு. போலீசார் விசாரணை.
ஆவடி, ஆனந்தன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு, 55; காவலாளி. திருமணமாகாத இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இரவு பணியை முடித்து, நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 45,000 ரூபாய், திருடு போனது தெரிந்தது. புகாரின் படி, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story