அரசு பள்ளியில் திருட்டு - பொதுமக்கள் போராட்டம்

அரசு பள்ளியில் திருட்டு - பொதுமக்கள் போராட்டம்

போலீசார் பேச்சுவார்த்தை 

ஓமலூர் அருகே அரசு பள்ளியில் திருடியவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ரெட்டியூர் அரசு பள்ளியில் நேற்று இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரிசி, பருப்பு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களுக்கு உணவு வழங்க வைத்திருக்கும் பொருட்களைப் பலமுறை திருடிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் எனவும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மேட்டூர் சாராட்சியர் தணிகாசலம், ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா மற்றும் வட்டாட்சியர் புருஷோத்தமன் ஆகியோர் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பின்பு கலைந்து சென்றனர். ஓமலூர் அருகே அரசு பள்ளியில் திருடியவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story