ஓடும் பேருந்தில் 12 பவுன் நகை திருட்டு

ஓடும் பேருந்தில் 12 பவுன் நகை திருட்டு

காவல்துறை விசாரணை

தர்மபுரியில், அடகு வைப்பதற்காக தனியார் பள்ளி ஆசிரியை எடுத்துச் சென்ற 12 பவுன் நகையை, ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஏ.செட்டிஅள்ளி அருகே சிவா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி மகாலட்சுமி, தனியார் பள்ளி ஆசிரி யையான இவர், மகளின் படிப்பு செலவிற்காக 12 பவுன் நகையை அடகு வைத்து, கடன் பெறமுடிவு செய்தார். இதையடுத்து, நேற்று நகையை எடுத்துக்கொண்டு, டவுன் பஸ்சில் தர்மபுரிக்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியதும், பையை பார்த்த போது நகை மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். மீண்டும் பஸ்சில் ஏறி தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. ஓடும் பஸ்சில் மர்ம நபர் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் மகா லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story