திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 பவுன் நகை திருட்டு

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 பவுன் நகை திருட்டு

திருப்பூர் மங்கலம் சாலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நாலரை பவுன் நகை திருடியவர்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் மங்கலம் சாலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நாலரை பவுன் நகை திருடியவர்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மங்களம் சாலை அருகே வீட்டில் பூட்டை உடைத்து 4 1/2 பவுன் நகை திருட்டு! திருப்பூர் மங்கலம் சாலை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுகுணா (வயது 54) இவருடைய கணவர் பழனிச்சாமி இவர் கடந்த வாரம் இறந்த நிலையில் சடங்குகள் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சுகுணா சொந்த ஊரான சென்னிமலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை வீட்டின் அருகில் குடியிருந்தவர்கள் சுகுணாவின் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பகுதி உடைக்கப்பட்டிருந்தது.மேலும் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்ததோடு வீட்டில் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து நாலரை பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story