இளம்பெண்ணிடம் லேப்டாப் திருட்டு

இளம்பெண்ணிடம் லேப்டாப் திருட்டு

பைல்படம்

சேலத்தில் இருந்து கோவை சென்ற பஸ்சில் இளம்பெண்ணிடம் இருந்த லேப்டாப் திருட்டு போனதையடுத்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அடுத்த பண்ணவாடி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் மைதிலி (வயது 23). இவர் சம்பவத்தன்று அதிகாலை கோயம்புத்தூர் செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் தனது இருக்கைக்கு மேற்புறம் உள்ள லக்கேஜ் கேரியரில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் பையை வைத்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேப்டாப் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் நைசாக நோட்டமிட்டு லேப்டாப்- ஐ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மைதிலி பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story