வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலிசார் வலைவிச்சு

வீட்டின் பூட்டை உடைத்து  நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலிசார் வலைவிச்சு

 திருட்டு

திருச்சி மாவட்டம் முசிறி பாரிவள்ளல் நகரில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து வீட்டில் இருந்த நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் முசிறி பாரிவள்ளல் நகரை சேர்ந்தவர் 42 வயதான அசோக். இவர் கடந்த 18 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வால்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் 21ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் 344 கிராம் வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து முசிறி காவல் நிலையத்தில் அசோக் புகார் அளித்தார். புகாரின் பேரில் முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.மேலும் நகை, வெள்ளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story