பவர் பிளாண்டில் இரும்பு கம்பிகள் திருட்டு: 4பேர் கைது!

பவர் பிளாண்டில் இரும்பு கம்பிகள் திருட்டு: 4பேர் கைது!

பவர் பிளாண்டில் இரும்பு கம்பிகள் திருட்டு: 4பேர் கைது!

உடன்குடி அருகே பவர் பிளாண்டில் ரூ.1லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடிய 4பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலையம் பணிகள் நடந்து வருகிறது. இங்கிருந்த 350 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் திருடு போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.1லட்சம் ஆகும். இது தொடர்பாக பவர்பிளாண்ட் கண்காணிப்பாளர் ஜெகன் (47) என்பவர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கல்லாமொழியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஆதிசெல்வம் (30), குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கிளின்டன் மகன் ஜெபஸ்டின் (28), ஜோதி நாராயணன் மகன் சூரியகுமார் (25), மணப்பாட்டைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ராபர்ட் (35) ஆகிய 4பேரை கைது செய்து இரும்பு கம்பிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தார்.

Tags

Next Story