தேனி : தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர்

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
75 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பலூன்களை பறக்க விட்டு மரியாதை செய்தார். பின்னர் காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பல்வேறு துறைகளில் உள்ள 64 பயனாளிகளுக்கு 3,92, 62,111 ருபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story