10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கத்தினர் போராட்டம்
10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற்து.

வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி, அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பேயதேவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags

Next Story