கரும்பு சாறு கடைகளில் குவியும் பொதுமக்கள்

கரும்பு சாறு கடைகளில் குவியும் பொதுமக்கள்
 கரும்பு சாறு கடை
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நாவறட்சியை தடுக்க பொதுமக்கள் கரும்பு சாறு கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர், இதில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கரும்பு சாறு பழச்சாறுகளை குடிப்பதற்காக கரும்பு சாறு கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் இன்று 30ம் தேதி தென்காசி நகரில் உள்ள கரும்பு சாறு மற்றும் பழக்கடைகளில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags

Next Story