பாவூா்சத்திரத்தில் புனித அந்தோணியாா் ஆலயத் தோ் பவனி

பாவூா்சத்திரத்தில் புனித அந்தோணியாா் ஆலயத் தோ் பவனி

பாவூா்சத்திரத்தில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது


பாவூா்சத்திரத்தில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தோ் பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தோ் பவனி பாவூா்சத்திரம் பிரதான பகுதிகளில் நடைபெற்றது.

அப்போது மக்கள் மாலைகள், மெழுகுவா்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கி புனித அந்தோணியாரை பிராா்த்தித்தனா். விழாவில், பாவூா்சத்திரம், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா், அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story