பொங்கல் பண்டிகையன்றும் ரயில் முன்பதிவு மையங்கள் உண்டு

பொங்கல் பண்டிகையன்றும் ரயில் முன்பதிவு மையங்கள் உண்டு

பொங்கல் பண்டிகையன்றும் ரயில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையன்றும் ரயில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் பொங்கல் பண்டிகையான வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று செயல்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும், இதனை ரெயில் பயணிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story