தென்காசியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

தென்காசியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

பைல் படம் 

தென்காசியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசியில் இன்று (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30 - 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வெளியூர்கள் மற்றும் வெளியிடங்கள் செல்லும் பொழுது பாதுகாப்பாக செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story