சுங்குவார்சத்திரம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

சுங்குவார்சத்திரம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மேம்பால சாலையில் வழிந்த்தோடும் கழுவி நீரால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் -- கீழச்சேரி நெடுஞ்சாலை இணையும் சுங்குவார்சத்திரம் பகுதியில் மேம்பாலாம் உள்ளது.

இந்த சாலை வழியே வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில்,சுங்குவார்சத்திரம் நான்குமுனை சந்திப்பில் இயங்கி வரும் உணவகங்கள், இறைச்சி கடைகள், சிறிய வணிக கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேம்பாலத்தில் கீழ் உள்ள சாலையில் ஆறாக வழிந்தோடுகிறது.

இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீரில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் தொற்று நோய் பரவும் அபாயத்தில், கழிவுநீரில் நடந்துசெல்கின்றனர்.

Tags

Next Story