குலசேகரம் அருகே சாலையில் பற்றி எரிந்த பைக்கால் பரபரப்பு

குலசேகரம் அருகே சாலையில் பற்றி எரிந்த பைக்கால் பரபரப்பு

பைக்கில் தீ விபத்து  

குலசேகரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள வலியாற்று முகம் பகுதியிலிருந்து அண்டூர் பகுதி நோக்கி நேற்று மாலை வாலிபர் ஒருவர் கனரக பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் அண்டூர் பகுதியில் செல்லும் போது திடீரெனத் தீயுடன் அதிக அளவு புகை வந்துள்ளது. உடனடியாக பைக்கை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, வாலிபர் கீழே இறங்கி உள்ளார். அந்த நேரத்தில் தீ மளமள என கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர். அதற்குள் பைக்கின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் பைக்கை அந்த பகுதியை சேர்ந்த விவேக் (25)என்பவர் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story