திருச்சி தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் ஏதுமில்லை:அண்ணாமலை

திருச்சி தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் ஏதுமில்லை:அண்ணாமலை

பிரச்சாரம் செய்த அண்ணாமலை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து, திருச்சி தென்னூரில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ப. செந்தில்நாதனை ஆதரித்து, திருச்சி தென்னூரில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது, திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. திருப்புமுனையாகத் திகழும் ஊா் திருச்சிக்கு வளா்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. திமுகவுக்கு திருச்சி மக்கள் மீது அக்கறையில்லை. அதனால் திமுகவுக்கு வாக்களிப்பது பிரயோஜனம் இல்லாதது.

திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள். தேஜகூ வேட்பாளா் வெற்றி பெற்றால் திருச்சி வளா்ச்சியடைவது உறுதி. திருச்சியில் நானும்,

கூட்டணிக் கட்சித் தலைவா்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றாா் அண்ணாமலை. இந்தப் பிரசாரத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story