பந்தல் இருக்கு தண்ணீர் இல்லை - கட்சியினர் மீது அதிருப்தி

பந்தல் இருக்கு தண்ணீர் இல்லை - கட்சியினர் மீது அதிருப்தி

தண்ணீர் இல்லாத தண்ணீர் பந்தல் 

பூந்தமல்லியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பந்தல் இருக்கு தண்ணீர் இல்லை என கட்சியினர் மீது அதிருப்தியடைந்தனர்.

பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், வரதராஜபுரம், காட்டுப்பாக்கம் பகுதியில், கடந்த 1ம் தேதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா அன்று அலங்கார பந்தல், கட்சி கொடிகள் என, ஆடம்பரமாக விழா நடந்தது.

மாவட்ட செயலர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்தனர். திறப்பு விழா அன்று மட்டும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், குளிர்பானம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு, தண்ணீர் பந்தல் மட்டுமே உள்ளது. இங்கு தண்ணீர் பானையும் இல்லை. இதே போல், குன்றத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் கடந்த மாதம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் கந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விழா முடிந்த அடுத்த நாள், தண்ணீர் பந்தலில் தண்ணீர் வைக்கவில்லை. பந்தலும் அகற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story